தமிழ்நாடு
விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா!
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
செப்டம்பர் 24-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்று அறிகுறி காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பிரேமலதாவும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவரைத் தொடர்ந்து, கட்சி பொருளாளரும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது, தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.