தமிழ்நாடு
விஜயகாந்துக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ளதால், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த்துக்கு, கொரோனா சோதனை நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு முன்னதாக வழங்கப் பட வேண்டிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
தேமுதிக தொண்டர்கள், மருத்துவமனை பக்கம் குவிந்துவருகின்றனர்.