தமிழ்நாடு

தேமுதிக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி!

Published

on

திருச்சியில் தேமுதிக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்கழு தலைவர் சரண்யா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், ‘எங்களுடைய பகுதிகளில் நாங்கள் கூறிய வேலைகளுக்கு இல்லாமல், சம்பந்தமே இல்லாமல் மற்ற வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறீர்கள்’ என்று முழக்கமிட்டபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சொரத்தூர் தேமுதிக கவுன்சிலர் சிவக்குமார் திடீரென ஒன்றிய அலுவலகத்தை விட்டு வெளியே வந்து ஒன்றியக்குழு தலைவரைக் கண்டித்து தீக்குளிக்க முயற்சி செய்தார். இது குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அவரை சமாதானம் செய்து ஒன்றிய கவுன்சிலர்களை கலைந்து போகும்படி அறிவுறுத்தினர்.

Trending

Exit mobile version