தமிழ்நாடு

பாஜக மாஸ்டர் பிளான்.. நாளை மோடி பங்கேற்கும் சென்னை கூட்டத்தில் விஜயகாந்த்!

Published

on

சென்னை: நாளை சென்னையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் சென்னையில் வண்டலூரில் நடக்க உள்ளது. இதற்கான பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள எல்லா தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணியும் இதில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிலையில்தான் அதிமுகவுடன் இணைவது குறித்து தேமுதிக முடிவு செய்துவிட்டது என்று கூறுகிறார்கள். நாளை இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்து இருக்கிறார். தேமுதிக கூட்டணி குறித்து நாளை அறிவிப்போம் என்று அவர் தேமுதிக தொண்டர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் நாளை பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில் விஜயகாந்தும் கலந்து கொள்வார் என்று கூறுகிறார்கள். எல்லா கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்வதால் விஜயகாந்தும் இந்த விழாவில் கலந்து கொள்வார். அதிமுகவும், பாஜகவும் இது தொடர்பான அழைப்பை விஜயகாந்திற்கு அளிக்கும் என்று கூறுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version