தமிழ்நாடு

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி: தொடர்ந்து சிகிச்சை!

Published

on

சமீப காலமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதியுற்று வருகிறார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் மருத்துவமனை, வீடு என மாறி மாறி சென்று வருகிறார். இந்நிலையில் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவரது உடல்நிலையில் அவ்வப்போது சிக்கல் வருகிறது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மீண்டும் சென்னை போரூர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவ தேமுதிக சார்பிலும், அவரது குடும்பம் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது மகனும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்தார். அதன் பின்னர் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்.

இந்நிலையில் மீண்டும் விஜயகாந்தின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை முதல் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்திற்கு என்ன பிரச்சனை இருக்கின்றது என்பது இன்னமும் தெளிவாக விளக்கப்படவில்லை. தொடர்ந்து சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார் விஜயகாந்த்.

seithichurul

Trending

Exit mobile version