தமிழ்நாடு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும், அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து திமுக தொண்டர்கள் விஜயகாந்த் அவர்களுக்கு என்ன ஆச்சு என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக தரப்பில் இருந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தொண்டர்கள் எந்தவித கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அவரது கட்சியின் தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.