தமிழ்நாடு

தேமுதிக வேட்பாளருக்கு கொரோனா தொற்று: தனியார் மருத்துவமனையில் அனுமதி!

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கே கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு அதே கட்சியைச் சேர்ந்த அண்ணாநகர் வேட்பாளர் பொன்ராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

Us corona death toll overtakes world war 2இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் நாள் நெருங்க நெருங்க தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் வேட்பாளர்கள் தேர்தல் பணிகளை செய்து கொண்டிருப்பதால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் வேட்பாளர்களாக இருந்தாலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version