தமிழ்நாடு

தமிழ் தெரியாத தேமுதிக வேட்பாளர்: வேட்புமனு தாக்கலின்போது பரபரப்பு!

Published

on

சென்னை திருவிக நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர் உறுதி மொழியை படிக்க முடியாமல் திணறிய நிலையில் அவருக்கு அருகில் இருந்தவர் உதவி செய்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் அமமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் சேகர் என்பவர் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு உறுதிமொழி பத்திரம் வாசிக்கும் போது தமிழ் தெரியாததால் படிக்க முடியாமல் திருதிருவென விழித்தார்.

அப்போது அவருக்கு தமிழ் தெரியாது என்பதை தேர்தல் அதிகாரிகளிடம் கூற, அவருடைய சம்மதத்துடன் அருகில் இருந்த மாவட்ட செயலாளர் அந்த உறுதிமொழியை வாசிக்க அதனை அப்படியே சேகர் திருப்பிச் சொன்னார்.

சிலநிமிடங்களில் ஒருவழியாக உறுதிமொழியை வாசித்துவிட்டு அதன்பின் வேட்புமனு தாக்கல் செய்தார் சேகர். பின்னர் அவரிடம் பேசியபோது தேமுதிக வேட்பாளர் சேகருக்கு தமிழ் மட்டுமல்ல எந்த மொழியுமே படிக்க தெரியாது என்று தெரியவந்தது. தமிழ் மொழியை படிக்க தெரியாத இவர் எப்படி சட்டமன்றத்தில் செயல்படுவார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.

Trending

Exit mobile version