சினிமா செய்திகள்
பிரபல இயக்குனரின் தந்தை கொரோனாவுக்கு பலி!
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் செல்வா அவர்களின் தந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
ஏற்கனவே நேற்று பாடகர் கோமகன், நடிகர் பாண்டு ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இயக்குனர் செல்வாவின் தந்தை பக்தவச்சலம் என்பவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 85.
மேலும் செல்வாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன, மறைந்த செல்வா தந்தையின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது
செல்வா மற்றும் அவருடைய தாயார் இருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது
அஜித் நடித்த முதல் திரைப்படமான அமராவதி உள்பட பல திரைப்படங்களை இயக்குனர் செல்வா இயக்கியுள்ளார் என்பதும், தற்போது அவர் அரவிந்த்சாமி நடித்துவரும் வணங்காமுடி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.