சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கம் முடக்கம்!

Published

on

இயக்குநர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது என்பதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் கிட்டத்தட்ட இரண்டும் மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்களை கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்க ஹேண்டில் திடீரென சர்கிள் என பெயர் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

‘யார் இந்த சர்கிள்? என்னுடைய ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இது அதிகம் பயம் தரக்கூடியதாகவும் எரிச்சலூட்டும் விஷயமாகவும் உள்ளது. யார் இந்த வேலையை செய்து இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார். நேற்று மாலை தன் மகனுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து பாராட்டும் வெற்றியும் கற்றுத் தருவதை விட அவமானமும் தோல்வியும் கற்றுத்தருவது அதிகம்.

இந்த கடினமான சமயத்தில் தன்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தன் மகன்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததையும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன். மேலும், தன்னுடைய அடுத்த படம் குறித்தான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தார்.

அதில் நடிகர் பிரதீப் ரங்கநாதனை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version