சினிமா செய்திகள்

சூர்யா உடனான ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்?- வெற்றிமாறன் விளக்கம்

Published

on

நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறித்து அந்தப் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள படம் வாடிவாசல். வாடிவாசல் என்னும் புத்தகத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் இயக்கப்பட இருந்தது. ஆனால், இந்தப் படத்துக்கான படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட வேகத்தில் நிறுத்தப்பட்டன.

படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், “படப்பிடிப்புகள் நிறுத்தப்படவில்லை. தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வாடிவாசல் படத்தை எடுக்க சுமார் 500, 1000, 2000 என மக்கள் கூட்டம் முழுவதுமாகத் தேவைப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்றுத் தணிந்துள்ளது.

ஆனாலும், 2000 பேரை வைத்துக் கொண்டு இந்த கொரோனா சூழலில் படப்பிடிப்பு நடத்துவது என்பது பெரிய ரிஸ்க். அதனால் தான் நான் சூரி உடனான படத்துக்கும் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் படத்திலும் பிஸியாகிவிட்டோம். கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதனது வீரியம் மற்றும் பயன்பாடு குறித்து முழு தெளிவு வந்த உடன் தான் வாடிவாசல் படப்பிடிப்புத் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version