சினிமா செய்திகள்
‘சிம்பு மாமா லவ் யூ’ என மேடையில் சொன்னது சரியா..?- நடிகை நித்தி அகர்வாலுக்காக சுசீந்திரன் விளக்கம்
ஈஸ்வரன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் நடிகை நித்தி அகர்வாலின் செயலைக் கண்டித்து சமுக வலைதளங்களில் சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அது குறித்து நடிகை நித்தி அகர்வாலுடன் இயக்குநர் சுசீந்திரம் விளக்கம் அளித்துள்ளார். ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை நித்தி அகர்வால் சிம்புவைப் பார்த்து ‘சிம்பு மாமா…ஐ லவ் யூ…’ எனக் கூறியிருப்பார். இதற்கு சிம்பு ரசிகர்கள் நித்தியின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதற்கு விளக்கம் அளித்த இயக்குநர் சுசீந்திரன், “ஈஸ்வரன் படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக நித்தியின் கதாபாத்திரம் இருக்கும். அந்தப் பட வசனத்தைத் தான் நான் நித்தியை மேடையில் செய்து காண்பிக்கச் சொன்னேன். ரசிகர்கள் இதைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.