சினிமா செய்திகள்
இயக்குனர் சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் உறுதி செய்த குஷ்பு
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை குஷ்புவும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ’அரண்மனை 3’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருந்த சுந்தர் சி, குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் குஷ்பு தனது தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறிய போது ’தனது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
Hi, my husband #SundarC has tested #Covid19 positive today eve. He is doing well but admitted in hospital for precautionary measures. Request anyone who has been in contact with him to please isolate yourself and get tested immediately. Pls prayer for his speedy recovery. ????????????
— KhushbuSundar (@khushsundar) April 10, 2021