சினிமா செய்திகள்

இயக்குனர் எஸ்பி முத்துராமனுக்கு கொரோனவா? மருத்துவமனையில் அனுமதி!

Published

on

பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்படுவதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை சற்றுமுன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ’இயக்குநர் எஸ்பி முத்துராமன் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதன் முடிவுகள் வெளிவந்து விடும். தற்போது அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இயக்குனர் எஸ்பி முத்துராமன் அவர்கள் 1972ஆம் ஆண்டு ‘கனிமுத்து பாப்பா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். அதன் பின்னர் அவர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் உள்பட பல மாஸ் நடிகர்களின் படங்களை இயக்கினார் என்பதும் அவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 1992ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கிய ’பாண்டியன்’ திரைப்படம் அவரது 70வது திரைப்படம் என்பதும் அதன் பின்னர் அவர் ஒரே ஒரு படம் மட்டுமே இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எஸ்பி முத்துராமன் அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகினரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version