சினிமா

மகள் திருமணத்தில் கலந்து கொண்ட முதல்வருக்கு நன்றி கூறிய ஷங்கர்!

Published

on

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் தாமோதரன் என்பவரின் மகனும் கிரிக்கெட் வீரருமான ரோகித் என்பவருக்கும் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் நேற்று இணையதளங்களில் வைரலானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தனது மகளின் திருமணத்திற்கு வருகை தந்த முதல்வருக்கும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களுக்கும் உதயநிதி எம்எல்ஏவுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சற்று முன்னர் ஷங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முதல்வர் அவர்களின் ஆசி மணமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும், அவருடைய வருகை தங்களுக்கு மிகவும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்து உள்ளதாகவும் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதல்வருடன் அவர் நடந்து செல்லும் புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்த இயக்குனர் ஷங்கர் அப்போதே மகளின் திருமண அழைப்பிதழையும் முதல்வரிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version