சினிமா செய்திகள்
மீண்டும் அப்பா ஆனார் இயக்குநர் செல்வராகவன்… பிறந்த அன்றே குழந்தைக்கு பெயர் வைப்பு!
இயக்குநர் செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதியருக்கு இன்று மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.
மூன்றாவதாக இன்று செல்வராகவனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு முன்னர் செல்வராகவனுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். தற்போது மீண்டும் ஒரு மகன் பிறந்துள்ளான்.
மகனுக்கு முன்னதாகவே பெயர் யோசித்து வைத்திருந்த செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதியர் குழந்தை பிறந்த உடனே பெயரும் வைத்துள்ளனர். செல்வா தனது மகனுக்கு ரிஷிகேஷ் செல்வராகவன் என பெயர் வைத்துள்ளார். செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு மணந்தார். 2012-ம் ஆண்டு முதல் குழந்தை லீலாவதி பிறந்துள்ளாள். இரண்டாவதாக 2013-ம் ஆண்டு மகன் ஓம்கர் பிறந்துள்ளான்.