சினிமா செய்திகள்

‘எங்களுக்கான பொங்கல் பரிசு ரிஷிகேஷ்’- குழந்தையின் முதல் போட்டோவை வெளியிட்ட இயக்குநர் செல்வராகவன்

Published

on

இயக்குநர் செல்வராகவன் தனது குழந்தையுடன் மகிழ்ச்சிகரமாக பொங்கல் விடுமுறையைக் கொண்டாடி வருகிறார்.

இயக்குநர் செல்வராகவனுக்கு கடந்த ஜனவரி 7-ம் தேதி மூன்றாவதாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு செல்வராகவனுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகனுக்கு முன்னதாகவே பெயர் யோசித்து வைத்திருந்த செல்வராகவன் கீதாஞ்சலி தம்பதியர் குழந்தை பிறந்த உடனே பெயரும் வைத்துள்ளனர். செல்வா தனது மகனுக்கு ரிஷிகேஷ் செல்வராகவன் என பெயர் வைத்துள்ளார்.

மகன் பிறந்த ஒரே வாரத்தில் பொங்கல் விடுமுறை தொடங்கி விட்டதால் மகன் ரிஷிகேஷ் உடன் உற்சாகமாக விடுமுறையைக் செல்வா கொண்டாடி வருவதாக அவரது மனைவி சமுக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். மேலும், இதன் மூலம் பிறந்து ஒரு வாரமே ஆன மகன் ரிஷிகேஷின் புகைப்படத்தை முதன்முறையாக ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர்.

Trending

Exit mobile version