தமிழ்நாடு
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை மரணம்!
பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் இன்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 63.
இயக்குநர் பா.ரஞ்சித் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை எடுத்தவர். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் இவர் திகழ்கிறார். மேடைகளில் சமூக கருத்துக்களை ஆவேசமாக கூறும் பா.ராஞ்சித் தனது பேச்சுக்களால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து வழக்கிலும் சிக்கியுள்ளார். இந்த வழக்கில் தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாண்டுரங்கன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு அவரது சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.