சினிமா செய்திகள்
‘அடங்காத் தமிழன் விஜய் ரசிகர் மன்றம்’ தலைவன் நான்… மார்தட்டும் இயக்குநர் மாரி செல்வராஜ்..!
இயக்குநர் மாரி செல்வராஜ் தான் ‘அடங்காத் தமிழன் விஜய் ரசிகர் மன்றம்’ தலைவன் எனப் பெருமையுடன் பகிர்ந்து வருகிறார்.
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநர் ஆக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாரி செல்வராஜ். அந்தப் படத்துக்குக் கிடைத்த பெரிய வரவேற்பு மற்றும் பாராட்டால் இரண்டாவதாக நடிகர் தனுஷ் உடன் கர்ணன் என்னும் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படம் வருகிர ஏப்ரல் மாதம் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது.
இதையடுத்து மூன்றாவதாக கால்பந்து விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட கிராமத்துக் கதை ஒன்றை நடிகர் த்ருவ் விக்ரம் கொண்டு மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மாரி செல்வராஜ் தன்னுடைய பேட்டிகளில் எல்லாம் தான் ஒரு தளபதி விஜய் ரசிகன் என்பதை பெருமையாகச் சொல்ல தவறுவதே இல்லை.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாரி செல்வராஜ், “என்னோட ஊர்ல அடங்காத் தமிழன் விஜய் ரசிகர் மன்றம் வச்சிருக்கோம். அந்த மன்றத்தோட தலைவனே நான் தான்” எனப் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.