சினிமா செய்திகள்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு முதல் கருத்தை டிவிட்டர் மூலம் தெரிவித்த சேரன்!
![Cheran - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/09/Cheran.jpg)
பிக்பாஸ் 3 சீசனில் ஒரு போட்டியாளராகப் பங்கேற்ற சேரன் சென்ற ஞாயிற்றுக்கிழமை வெளியேறினார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சேரன், “தலைவணங்கி நிற்கிறேன்..
எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு என்னைத் தாலாட்டித் தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்லிதயங்களுக்கும் நன்றி..
நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி.” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.