சினிமா செய்திகள்

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

Published

on

பிரபல இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்த கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் 22 ஆயிரம் பேர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் உள்பட சில முக்கிய அரசியல்வாதிகளும், கமல்ஹாசன் த்ரிஷா உள்பட பல திரையுலக பிரபலங்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், அவர் மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என சினிமா உலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version