சினிமா

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

Published

on

‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்புக்கு சிக்கல் என்று வந்த செய்திக்கு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக திருநெல்வேலிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மேலும் இங்கு உள்ள விலங்குகள் சரணாலயம் படப்பிடிப்பால் பாதிக்கப்படுவதாகவும், நீரோடைகள் மற்றும் வனப்பகுதிகள் படக்குழுவினரால் சேதப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என பொதுமக்களும் அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் படுகுழுவின் மீது வனதுறையில் புகார் தெரிவித்தனர். மேலும், அரசாங்கத்திடம் முறையாக படப்பிடிப்பு அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர் எனவும் சொல்லப்பட்டது.

இப்பொழுது இந்த புகார்களுக்கு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ” தனியாருக்கு சொந்தமான இடத்தில்தான் நாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு நடத்தி வருகிறோமே தவிர காட்டில் கிடையாது. அப்படி இருக்கும்பொழுது இந்த குற்றச்சாட்டுகளே அடிப்படையில் தவறானது. தனியார் இடத்தில் நடக்கும் இந்த படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய செட் போட்டு இருக்கிறோம் என்றால் அதுவும் கூட அரசிடம் முறையாக அனுமதி வாங்கி தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அப்படி இல்லாமல் இவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடியாது. இப்படி இருக்கும்போது இந்த மாதிரியான புகார்கள் வருவது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் விசாரித்து வருகிறது. விரைவில் இந்த பிரச்சினையை சரி செய்வோம். அதே சமயத்தில் கடைப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version