தமிழ்நாடு

“இந்த ஆட்சி எவ்ளோ கேவளமா இருக்குனு பாருங்க!”- அதிமுக அரசுக்கு எதிராக சீறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published

on

தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கலில் அதிமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் இவ்வாறு பேசி, சலசலப்பை ஏற்படுத்தினார் அமைச்சர் சீனிவாசன்.

‘பொங்கலுக்குத் தமிழக அரசு 2,500 ரூபாய் கொடுக்கும் என்று சொன்னவுடன் அதற்கு திமுக எதிர்ப்புத் தெரிவித்தது. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திலும், தமிழக அரசின் இந்த திட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்டது திமுக. ஆனால் நீதிமன்றம், ‘இது அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு. இதில் தலையிடும் அதிகாரம் எங்களுக்கு இல்லை’ என்று சொல்லிவிட்டது. அப்படி நீதிமன்றம் உத்தரவிட்ட காரணத்தினால், நாமெல்லாம் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.

தற்போது பரிசுத் தொகை அனைவருக்கும் கொடுக்கப்பட்ட உடன், நாங்கள் தான் அதற்கு காரணம் என்று உரிமை கொண்டாடுகிறது திமுக. இதை எப்படி மக்கள் ஏற்பார்கள். இப்படி மாறி மாறி வேடம் போடுகிறது திமுக. கேப்பையில் நெய் வடியும் என்று சொன்னால், கேட்பவருக்கு எங்கு போனது அறவு என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

தயவு செய்து, இந்த ஆட்சி எவ்வளவு கேவலமானது என்பதை பாருங்கள். எவ்வளவு அசிங்கமாக போய்க் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

திமுகவை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், சொந்தக் கட்சி ஆட்சிக்கு எதிராகவே திண்டுக்கல் சீனிவாசன் பேசியது, கூட்டத்தில் இருந்த மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version