தமிழ்நாடு

“கோபத்தை ஓட்டு போடும் போது காட்டிடாதீங்க..!”- மக்களிடம் கெஞ்சிய திண்டுக்கல் சீனிவாசன்

Published

on

தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தொடர்ந்து இரண்டாவது முறையாக திண்டுக்கல் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவர் தன் தொகுதியில் தொடர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பல நேரங்களில் என்ன சொல்வதென்று தெரியாமல் உளறிக் கொட்டி விடுகிறார்.

இது குறித்தான காணொலிகளும், செய்திகளும் அதிகம் பகிரப் படுகின்றன. இந்நிலையில் தன் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சீனிவாசன், பொதுக் கூட்டத்திற்குத் தாமதமாக வந்துள்ளார். இதனால் அங்கிருந்த பொது மக்களும் அதிமுக தொண்டர்களும் கோபமடைந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் பிரச்சார வாகனத்தில் ஏறிய அமைச்சர் சீனிவாசன், ‘இன்னைக்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. இந்தக் கோபத்தை யாரும் ஓட்டு போடும் போது காட்டிடாதீங்க’ என்று சிரித்துக் கொண்டே கெஞ்சினார்.

இதற்கு முன்னர் சீனிவாசன், ‘உங்களுக்குத் தெரியும், ஒரு கேஸ் சிலிண்டர் விலை 4,500 முதல் 5,000 ரூபாய் வரை இருக்கிறது. இதை வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்களை இலவசமாக கொடுக்கும் அருமையான திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்த உள்ளது.

‘உங்களுக்குத் தெரியும், ஒரு கேஸ் சிலிண்டர் விலை 4,500 முதல் 5,000 ரூபாய் வரை இருக்கிறது. இதை வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்களை இலவசமாக கொடுக்கும் அருமையான திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்த உள்ளது’ எனப் பேசி அதிர வைத்தார்.

 

seithichurul

Trending

Exit mobile version