தமிழ்நாடு

தினகரனுக்கு டாட்டா: எடப்பாடியிடம் சரணடைந்த முன்னாள் அமைச்சர்!

Published

on

அதிமுகவில் எடப்பாடி அணி, தினகரன் அணி என உருவாகியபோது கணிசமானோர் தினகரன் பக்கம் சென்றனர். ஆனால் தற்போது தினகரன் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகி மாற்று கட்சிகளில் சேர ஆரம்பிக்கின்றனர்.

முன்னதாக தினகரனின் அமமுக கட்சியில் முக்கிய பதவியில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விலகி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது தினகரனுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இதனையடுத்து பலர் அமமுகவில் இருந்து விலகி திமுக, அதிமுக கட்சிகளில் இணைந்தனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் அதிமுகவில் இணைந்துள்ளார். தினகரனின் அமமுக கட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் அதிலிருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி கோவை மாவட்டத்தில் முக்கியமான சட்டமன்ற தொகுதியாகும். இவர் 2001, 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர்.

Trending

Exit mobile version