தமிழ்நாடு
ஓபிஎஸ் பால் வியாபாரம், ஈபிஎஸ் சர்க்கரை வியாபாரம்: தினகரன் அனல் பறக்கும் பிரச்சாரம்!
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தினகரன் பிரச்சாரம் செய்யும் இடமெல்லாம் ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சிக்கிறார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து இளையான்குடி பகுதியில் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், கெடுவான் கேடு நினைப்பான் என்பதுபோல இன்று இடைத்தேர்தலில் வந்து சிக்கிக்கொண்டார்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும். சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட அதிமுக வெற்றிபெறாது.
இடைத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறாவிட்டால் பழையபடி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பழைய தொழிலுக்கே போகவேண்டியதுதான். ஓ.பன்னீர்செல்வமும் பால் வியாபாரமும், எடப்பாடி சர்க்கரை வியாபாரமும் செய்ய போய்விடுவார்கள் என்றார் கலகலப்பாக.