Connect with us

தமிழ்நாடு

ஈபிஎஸ் நான்கு கால் பிராணியாகத் தவழ்ந்து வந்து சசிகலாவின் காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன? தினகரன் காட்டம்!

Published

on

நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அந்த தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. நான்கு தொகுதிகளிலும் மூன்று கட்சிகளுக்கும் சமமான வெற்றி வாய்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையாக விமர்சித்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கொங்கு மண்டலம் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் என்றென்றும் ஆதரவாக இருந்த பகுதி. அதனால்தான் தான் முதல்வராகத் தொடரமுடியாத நிலையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பழனிசாமியை முதல்வராக்கிவிட்டுச் சென்றார் சசிகலா. அவர் நினைத்திருந்தால் அவரது அக்கா மகனாகிய என்னைக்கூட முதல்வராக்கி இருக்கலாம். ஆனால், நாங்கள் பதவிக்காக அலைபவர்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். எத்தனையோ பேரை உருவாக்கியவர்கள் நாங்கள்.

ஜெயலலிதா கூட பழனிசாமியை அமைச்சராகத்தான் ஆக்கினார். ஆனால், சசிகலாவோ முதல்வராக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். பழனிசாமி முதல்வராகப் பதவியேற்ற பின்னர் நான், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சிறைக்கு சசிகலாவைச் சந்திக்க கிளம்பினோம். அப்போது எங்களிடம் பேசிய பழனிசாமி, பாஜக என்னைக் குறிவைத்திருக்கிறது. என் மீது வழக்கு வரலாம். எனவே அவரை சந்திக்க வரவில்லை, அடுத்தமுறை வருகிறேன் என்றார். அதன்பிறகு நடந்தவை உங்களுக்கே தெரியும்.

பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக பழனிசாமி செய்ததற்குப் பெயர் ராஜதந்திரமா? சந்தர்ப்பவாதம்தான் ராஜதந்திரம் என்றால் அதை நீங்கள் அனுமதிப்பீர்களா? அன்றைக்கு நான்கு கால் பிராணியாகத் தவழ்ந்து வந்து சசிகலாவின் காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன? சுயம்பாக முதல்வராக வந்தால் காலில் விழக் காரணம் என்ன? என மிகவும் காட்டமாக பழனிசாமியை குறிவைத்து பிரச்சாரம் செய்தார் தினகரன்.

ஜோதிடம்60 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!