தமிழ்நாடு
மொத்தம் 8 தொகுதிகள்: சசிகலாவிடம் தினகரன் சொன்ன தேர்தல் ரிசல்ட்!
மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பின்னர் கடந்த செவ்வாய் கிழமை முதன் முதலாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பொதுச் செயலாளரான பின்னர் தினகரன் சசிகலாவை சந்திப்பத்தும் இதுவே முதன்முறை.
இந்த சந்திப்பின் போது சசிகலா பொதுச் செயலாளரான தினகரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தினகரன் சசிகலாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சசிகலா தேர்தல் நிலவரம் குறித்தும், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் தினகரனுடன் கேட்டு அறிந்துள்ளார்.
அப்போது குறிப்பாக மோடி மீண்டும் வருவாரா மாட்டாரா? என கேட்டுள்ளார் சசிகலா. அதற்கு தினகரன் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார் என பதில் கூறியதும் சசிகலா முகத்தில் அவ்வளவு சந்தோசம் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சசிகலாவிடம் பேசிய தினகரன் எடப்பாடி பழனிசாமிக்கு இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் போதுமான சீட் கிடைக்காது எனவும் இதனால் ஆட்சி கவிழும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 3 எம்பி, 5 எம்எல்ஏக்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தினகரன் சசிகலாவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.