தமிழ்நாடு
திருட்டுப் பய: தங்கத்தை சூடாக்கிய தினகரனின் அந்த ஒரு வார்த்தை!
![Thangam and Dinakaran - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/Thangam-and-Dinakaran-1.jpg)
தினகரனின் முக்கிய தளபதியாகவும், அமமுக முக்கிய நிர்வாகியுமாக வலம் வந்த தங்க தமிழ் செல்வன் தற்போது முற்றிலும் எதிராக மாறிவிட்டார். தினகரனை வசைபாடும் நிலைக்கு வந்துவிட்ட தங்க தமிழ்செல்வன் அதிமுகவுக்கு மீண்டும் செல்ல முடிவெடுத்துவிட்டார். தங்க தமிழ்செல்வன் ஏன் இந்த நிலைப்பாடுக்கு வந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தங்க தமிழ்செல்வன் தேனியில் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி அவர் பேசிய விவகாரங்கள் தினகரன் காதுக்கு வர அவர் தங்க தமிழ்செல்வன் மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். அப்போது தினகரன் வீட்டுக்கு வந்த வெற்றிவேலிடம் தினகரன், பாத்தீங்களா, நேத்து தேனியில ஏதோ கூட்டம் போட்டிருக்கானாம் அந்த திருட்டுப் பய என கடுமையான வார்த்தையை கூறியிருக்கிறார்.
இந்த வார்த்தை தங்க தமிழ்செல்வன் காதுக்கு போக தங்கம் கொந்தளித்துவிட்டாராம். அதன் பின்னர் தினகரனையும் சந்தித்து தன்னை பார்த்து திருட்டுப் பய என கூறியதற்கு கடுமையான வாக்குவாதம் செய்துவிட்டு வெளியேறினாராம் தங்க தமிழ்செல்வன். இந்த சூழ்நிலையில் தான் தங்க தமிழ்செல்வன் தினகரனின் உதவியாளர்களில் ஒருவரான செல்லப்பாண்டியனுக்கு போன் போட்டு தினகரனை மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார். இந்த ஆடியோதான் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.