Connect with us

தமிழ்நாடு

இரட்டை தலைமையின் இரட்டை நிலைப்பாடு: அதிமுகவை விமர்சிக்கும் தினகரன்!

Published

on

முத்தலாக் சட்டத்துக்கு அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆதரவாக பேசியும், ஆதரவாக வாக்களித்ததும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையிலெடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையை விமர்சித்துள்ளார்.

கடந்த மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் சட்டத்தை அதிமுக கடுமையாக எதிர்த்தது. ஆனால் தற்போது இதனை மீண்டும் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. இதில் மக்களவையில் பேசிய அதிமுகவின் ஒரே எம்பி ரவீந்திரநாத் குமார் யாரும் எதிர்பார்க்காத விதமாக முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவாக பேசி அதற்கு புகழாரம் சூட்டினார். மேலும் இந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இது தமிழக ஊடகங்களில் முக்கிய செய்தியாக பரவியது. இந்த விவகாரத்தை தற்போது அரசியல் கட்சிகள் கையிலெடுத்துள்ளன. திமுக வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் இதனை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. அதிமுக இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுகவின் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி நிலைமையை சமாளித்து வருகிறார்.

இதனையடுத்து இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்தலாக் மசோதாவை மக்களவையில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் ஆதரித்தார். ஆனால் தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக சார்பில் கலந்துகொள்பவர்கள், மாநிலங்களவையில் தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்று கூறுகிறார்கள்.

இரண்டு அவைகளிலும் வெவ்வேறு நிலைப்பாடு எடுப்பது சரியாக இருக்குமா? அப்படியென்றால் கட்சியே முரண்பாடாக இருப்பதாகத்தான் அர்த்தம். அதிமுக அரசின் இரட்டை நிலைப்பாட்டை சிறுபான்மையின மக்கள் புரிந்துகொள்வார்கள். இரட்டை தலைமையின் கீழ் சிறப்பாக செயல்படுவதாகக் கூறுகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம்தான் முத்தலாக் விவகாரத்தில் இந்த இரட்டை நிலைப்பாடு என விமர்சித்தார் தினகரன்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!