சினிமா செய்திகள்

டயட்டீஷியனுக்கு லட்ச ரூபாய் சம்பளம்: உண்மை உடைத்த டாப்ஸி!

Published

on

நடிகை டாப்ஸி தனது டயட்டீஷியனுக்கு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘ஆடுகளம்’, ‘காஞ்சனா’ உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் டாப்ஸி. இப்பொழுது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை டாப்ஸி சமூக வலைதளத்தில் வெளியிடும் அவரது உடற்பயிற்சி வீடியோக்கள், அவரது ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கும் சரியான உணவு முறைகளை பின்பற்றுவதற்கும் தனது டயட்டீஷியனுக்கு கிட்டத்தட்ட மாதம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் டாப்ஸி.

அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘ வெறும் கமர்சியல் படங்களின் கதாநாயகி என்பது போன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை இப்பொழுது பெரும் அளவில் குறைத்துவிட்டேன்.

கதைக்கும் என்னுடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கக்கூடிய கதைகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறேன். அப்படி இருக்கும் பொழுது என்னுடைய உடலை சரியாக பராமரிப்பது மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.

என்னுடைய உடல் மற்றும் உணவு பராமரிப்பிற்காக தனியாக ஒரு டயட்டீஷியனை வைத்து அவருக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இதை என் தந்தையிடம் சொல்லியபோது இவ்வளவு பணம் செலவு செய்கிறாயா என்று திட்டுவார்.

பின் நாட்களில் உடல் நல கோளாறுகள் என சொல்லிக்கொண்டு மருத்துவர்களுக்கும் மருத்துவமனைக்கும் பெரிய அளவில் செலவு செய்வதை காட்டிலும், இன்று ஒரு பகுதியாக சரியான வாழ்க்கை முறைக்கு செலவு செய்வது தவறு கிடையாது என்று நினைக்கிறேன்’ என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார் டாப்ஸி.

seithichurul

Trending

Exit mobile version