Connect with us

இந்தியா

பாஜக எம்எல்ஏக்கு எதிராக இளம்பெண் எழுதிய கடிதம் ஏன் எனது பார்வைக்கு வரவில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி!

Published

on

உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த 17 வயது சிறுமிக்கும் அவரது குடும்பத்துக்கும் எம்எல்ஏ தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக தலைமை நீதிபதிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அந்த கடிதம் அவரது பார்வைக்கு வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது கடந்த ஆண்டு உன்னோவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் அந்த எம்எல்ஏ அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆனால் இளம்பெண்ணின் தந்தை காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தார். இதற்கு சாட்சியாக இருந்த நபரும் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாய், அத்தை மற்றும் வழக்கறிஞருடன் அந்த பெண் காரில் சென்றுகொண்டிருந்த போது லாரி ஒன்று மோதியுள்ளது. அதில் அந்த பெண்ணின் தாய் மற்றும் அத்தை உயிரிழந்துள்ளனர். வழக்கறிஞரும், அந்த பெண்ணும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை ஜூலை 12-ஆம் தேதி எழுதியுள்ளார். அதில் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் கொலை முயற்சி நடத்த வாய்ப்பு இருக்கிறது. எம்எல்ஏ எங்களை மிரட்டி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது வரை இந்த கடிதம் தலைமை நீதிபதியின் பார்வைக்குச் சென்று சேரவில்லை. இதுதொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் எழுதிய கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை? எனக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இதுதொடர்பாக ஒருவாரத்திற்குள் விரிவான பதிலளிக்க உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!