சினிமா

இது உண்மையா? 3வது முறையாக தாலி கட்டப் போகிறாராம் விக்னேஷ் சிவன்.. பொண்ணு யாரு தெரியுமா?

Published

on

போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக நயன்தாரா, விஜய்சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார்.

அதன் பின்னர் சூர்யா, கீர்த்தி சுரேஷை வைத்து அவர் இயக்கிய பாலிவுட் ரீமேக் படமான தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு தியேட்டரில் கூட்டமே சேராததால் சொடக்கு மேல சொடக்குப் போட்டு படம் படு தோல்வி அடைந்ததாக நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளினர்.

#image_title

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் கோயில் கோயிலாக சுற்றி வருவதையே ஃபுல் டைம் வேலையாக பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷ் சிவன் அடுத்து என்ன படம் இயக்கப் போகிறார் என அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் மீண்டும் விஜய்சேதுபதியையும், நயன்தாராவையும் ஜோடி சேர்த்து, கூடவே சமந்தாவையும் இணைந்துக் கொண்டு எடுத்த படம் லாபகரமான படமாக மாறியது.

அதன் பின்னர் அஜித்தின் 62வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்ட நிலையில், சூர்யாவுக்கு ஏற்பட்ட கதி தான் நமக்கும் என நினைத்து ஒதுங்கிய அஜித் ஏகே 62 படத்தின் இயக்குநரை அதிரடியாக மாற்றினார்.

#image_title

கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி நயன்தாராவை ரஜினிகாந்த், மணிரத்னம், ஷாருக்கான், சூர்யா, விஜய்சேதுபதி என முன்னணி பிரபலங்களை வைத்து திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன், வாடகைத்தாய் பிரச்சனையின் போது நாங்க ஏற்கனவே 6 வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என சொல்லி, நெட்பிளிக்ஸிற்கான விளம்பர படமாகவே இந்த கல்யாணத்தை மாற்றியது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக பேச்சுக்கள் கிளம்பின.

ஜூன் 9ம் தேதி நயன்தாராவுக்கு பல கோயில் அர்ச்சகர்களை அழைத்து வந்து திருமணம் செய்தும் அடிமேல் அடி விழுவதை பார்த்த நயன்தாரா புதிதாக ஜோஷியம் பார்த்ததில் இன்னொரு முறை நல்ல நேரத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினால் பிரச்சனை சரியாகி விடும் எனக் கூறியுள்ளாராம்.

ஏற்கனவே வாழை மரத்துக்கு தாலி கட்டி தோஷம் கழித்த பின்னரே நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டிய நிலையில், மீண்டும் நயனுக்கு தாலி கட்டி எந்தவொரு பிரச்சனையும் வராமல் சந்தோஷமாக வாழ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை நம்பலாமா வேண்டாமா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version