உலகம்
சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா? அறிக்கை வெளியிட்ட உயர்மட்டக்குழு!
பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
பெங்களூர் சிறையில் சசிகலா சொகுசாக இருந்தது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா, சசிகலா பெங்களூரில் சிறையில் சொகுசாக இருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீதும் அவர் குற்றம்சாட்டினார்.
இதன்பின் இதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தாக்கல் செய்ய அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி புகார் கூறிய டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு சிறையில் கூடுதல் வசதிகள் அளிக்கப்பட்டது உண்மைதான். ஆடை மற்றும் பார்வையாளர் சந்திக்கும் விவகாரத்திலும் நிறைய விதிகள் மீறப்பட்டுள்ளது. முக்கியமாக அடிக்கடி நிறைய பார்வையாளர்கள் வந்து சென்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.