சினிமா செய்திகள்
ரஜினிக்கே ராகவேந்திரா மண்டபம் கிடைக்கவில்லையா? இன்றைக்கே நடந்து முடிந்த வரவேற்பு நிகழ்ச்சி!
ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் வரும் திங்களன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செளந்தர்யா ரஜினியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
பொதுவாக திங்களன்று காலை திருமணம் என்றால், முதல் நாளான ஞாயிறன்று இரவு தான் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், இன்று காலை 11 மணிக்கே திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது, மண்டபம் பிசியாக உள்ளதாலா அல்ல ஜாதக ரீதியாக ஏதாவது சம்பிரதாயமா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
கடந்த 2010ம் ஆண்டு செளந்தர்யா ரஜினிகாந்துக்கும் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் சென்னையில் உள்ள ராணி மெய்யம்மை மஹாலில் திருமணம் நடந்தது. பின்னர், 2017ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் நடந்தது.
இந்நிலையில், தற்போது வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 11ம் தேதி செளந்தர்யா ரஜினிகாந்துக்கும் நடிகர் மற்றும் தொழிலதிபருமான விசாகனுடன் திருமணம் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.