சினிமா

நடிகர் விக்ரம் மகன் துருவ் செய்த நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டுக்கள்!

Published

on

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பலரும் உதவி செய்திருக்கிறார்கள், அதில் சிலருடைய உதவிகள் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நடிகர் விக்ரமனின் மகன் துருவ் விக்ரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நாடுமுழுவதிலும் இருந்து பலரும் கேரளாவை மீட்டெடுக்க உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் பெரும் தொகையினை கேரளாவுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளனர்.

குறிப்பாக தமிழ் நடிகர்கள் கேரள நடிகர்களை விட கனிசமான தொகையினை அதிகமாக வழங்கியுள்ளனர். தற்போது நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தன்னுடைய முதல் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய மொத்த சம்பளத்தையும் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்காக வழங்கியிருக்கிறார்.

பாலா இயக்கத்தில் வர்மா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் துருவ் விக்ரம் செய்த இந்த நெகிழ்ச்சி செயலுக்கு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Trending

Exit mobile version