இந்தியா

தோனியின் அம்மா அப்பாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல விஐபிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெற்றோருக்கு ஒரு கொரோனா செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

தோனியின் தந்தை பான்சிங் மற்றும் தாய் தேவகி ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்த போது கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தோனி பெற்றோர்கள் ராஞ்சியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர்களது உடலில் ஆக்சிஜன் லெவல் சரியாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிக்காக மும்பையில் இருக்கும் தல தோனி விரைவில் அவரது பெற்றோரை நேரில் சென்று சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version