கிரிக்கெட்

மீண்டும் கேப்டனாக களமிறங்கிய தோனி: ரசிகர்கள் உற்சாக முழக்கம்!

Published

on

ஆசிய கோப்பைக்கான சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக தோனி செயல்படுவார் என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாட்டு கேப்டன்களும் மைதானத்துக்கு வந்தபோது இந்தியா சார்பில் சர்ப்ரைஸாக தோனி கேப்டனாக வந்தார். இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக கே.எல்.ராகுல் மற்றும் மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தோனி கேப்டனாக இன்றைய போட்டியில் செயல்படுவார். மீண்டும் வழங்கப்பட்ட இந்த கேப்டன் பொறுப்பு குறித்து கூறிய தோனி, இந்திய அணியின் கேப்டனாக 199 போட்டிகளில் செயல்பட்டிருக்கிறேன். ஆனால், 200 போட்டிகள் என்ற எண்ணிக்கையை அடைய முடியவில்லை. அந்தக் குறையை இன்றைய போட்டி தீர்த்து வைத்துள்ளது என்றார்.

கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனியை மீண்டும் கேப்டனாக பார்த்ததில் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மைதானத்தில் ஒரே தோனி முழக்கமாகவே உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version