கிரிக்கெட்

இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடுப்பாகி சக வீரரை முட்டாள் என திட்டிய தோனி!

Published

on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் மயிரிழையில் வெற்றியை பறிகொடுத்த இந்திய அணி இரண்டாவது போட்டியை அதிரடியாக வென்றது.

அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது தண்ணீர் எடுத்து வந்த கலீல் அகமதுவை பிட்ச் மீது நடந்தததற்காக தோனி திட்டிய வீடியோ ஒன்று டுவிட்டரில் வெளியாகி உள்ளது.

நேற்று நடந்த போட்டியின் போது அதிக வெப்பம் மற்றும் அதிகமுறை ஓடி ஓடி ரன் எடுக்க நேரிட்டதால் ஒருகட்டத்தில் தோனி மயக்கமடையும் சூழல் உருவானது. இதனால் உடனடியாக அணியின் மருத்துவர் தோனிக்கு சிகிச்சை அளித்தார். அதன் பின்னர் ஓவர்களுக்கு இடையே தோனி மற்றும் தினேஷ் கார்த்திக்கிற்கு கலீல் அகமது குடிக்க தண்ணீர் எடுத்து சென்றார்.

அப்போது மைதானத்தின் பிட்ச் மீது கலீல் அகமது நடந்து சென்றதை பார்த்த தோனி கோபமடைந்து பிட்ச் மீது நடந்து வரலாமா? சுத்தி வரவேண்டியது தானே என கூறினார். மேலும் அப்போது கலீல் அகமதுவை சூட்டியா என திட்டினார். சூட்டியா என்பது இந்தியில் வழக்கமாக ஒருவரை திட்டுவதற்கு பயன்படுத்தும் சொல். இதற்கு தமிழில் முட்டாள், அறிவில்லாதவனே என பொருள்.

seithichurul

Trending

Exit mobile version