கிரிக்கெட்

களை கட்டியது ஐபிஎல் 2021: தோனி, அம்பத்தி ராயுடு சென்னை வருகை!

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கான அட்டவணை மிக விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது என்பதும் முக்கிய வீரர்களை இந்த தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகள் போட்டி போட்டுக்கொண்டு லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். ஐபிஎல் போட்டிகளில் விளையாட திட்டமிடுவது பயிற்சியில் ஈடுபடுவது ஆகியவற்றுக்காக தோனி சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியை அடுத்து சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரரான அம்பத்தி ராயுடு சென்னை வந்துள்ளார் என்பதும் மிக விரைவில் மற்ற வீரர்களும் சென்னை வரவுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது. ஐபிஎல் வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் களைகட்ட தொடங்கி விட்டதாகவே தெரிகிறது.

Trending

Exit mobile version