கிரிக்கெட்

கிரிக்கெட் ஓய்வுக்கு பின் திரையுலகமா? தோனி அளித்த பதில்!

Published

on

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் தல தோனி பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பாரா என்ற கேள்விக்கு அவரே கூறியுள்ள பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது தல தோனி ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் வழிகாட்டியாக அவர் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முழுமையாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்கப்போகிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த போது ’விளம்பர படங்கள் என்றால் நடிக்கலாம், ஆனால் திரைப்படம் என்று வரும்போது நடிப்பு தொழில் என்பது மிகவும் கடினமானது என்றும் அதை செய்வது தன்னால் முடியாது என்றும் படங்களில் தற்போது நடிப்பவர்களே நன்றாக நடிக்கும்போது நான் ஏன் புதிதாக நடிக்க வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் கிரிக்கெட் மட்டுமே தன்னுடைய துறை என்றும் கடைசி வரை கிரிக்கெட் சம்பந்தப்பட்ட துறையிலேயே தான் இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் ஹர்பஜன்சிங் இர்பான் பதான் உள்ளிட்ட பலர் திரையுலகில் நடிக்க வந்திருக்கும் நிலையில் தல தோனியும் நடிக்க வருவாரா என்ற எதிர்பார்ப்புக்கு தோனியின் பேட்டி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கூட அவர் நடக்கவில்லை என்பதும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பவர்தான் நடித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

seithichurul

Trending

Exit mobile version