விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் ‘இவ்வளவு’ சம்பாத்தியமா?- புதிய சாதனை படைத்த தோனி

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தொகை சம்பாதித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ‘தல’ தோனி.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வருகிறார் மஹேந்திர சிங் தோனி. இடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்பட்ட சிக்கலின் காரணமாக புனே அணியில் விளையாடினார் தோனி. இதுவரையில் நடந்த 13 ஐபிஎல் போட்டிகளின் மூலம் நடக்கப்போகும் 14-வது ஐபில் 2021 போட்டியையும் சேர்த்து அதிக தொகை சம்பாதித்த முதல் வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் தோனி.

இதுவரை சென்னை மற்றும் புனே ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியதன் மூலம் 137 கோடி ரூபாயை ஊதியமாகப் பெற்றுள்ளார் தோனி. வருகிற 2021 ஏப்ரலில் நடக்கும் 14-வது ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்க வைத்துக் கொண்டு உள்ளதால் ஐபிஎல் போட்டிகளிலேயே அதிகப்பட்சமாக 150 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் தோனி.

தோனிக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா 146.6 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version