தமிழ்நாடு

ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் மூலம் கொன்றது தினகரன் கும்பல்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்ததை அடுத்து இறப்பில் இன்று வரை பல சர்ச்சைகள் உள்ளது மட்டும் இல்லாமல் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது.

மறு பக்கம் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களும், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் ஜெயலலிதாவை கொன்றது குறித்து அவ்வப்போது சர்ச்சைகளைக் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

அப்படி இன்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதாவுக்குச் சர்க்கரை நோயை அதிகப்படுத்தி ஸ்லோ பாய்சன் மூலம் கொன்றது தினகரன் கும்பல். நிலக்கோட்டை தொகுதியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்கதுரையும் துரோகிதான், தினகரனும் ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கலாம் என நினைத்தார்கள்; அது முடியவில்லை என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version