சினிமா செய்திகள்

‘நம் மண்ணின் திறமைகளை உலகுக்கு காட்டியுள்ளீர்கள்’- சந்தோஷ் நாராயணனுக்கு தனுஷ் நன்றி..!

Published

on

கர்ணன் திரைப்பட பாடலில் ‘நம் மண்ணின் திறமையாளர்களை உலகுக்கு காட்டியதற்கு நன்றி’ என சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள திரைப்படம் கர்ணன். இந்தப் படத்தின் முதல் பாடல் ஆக ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்னும் பாடல் சமீபத்தில் வெளியாகி பயங்கர வைரல் ஆனது. இந்தப் பாடல் தனுஷ்- மாரி செல்வராஜ்- சந்தோஷ் நாராயணன் காம்போவுக்கும் மேல் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

இந்தப் பாடல் உண்மையில் ஒரு கிராமியப் பாடல். இதற்குக் கூடுதல் பலம் மட்டுமே சேர்த்துள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இந்தப் பாடலில் பல கிராமியக் கலைஞர்கள் பணியாற்றி உள்ளார்கள். இதற்கு நன்றி தெரிவித்த சந்தோஷ் நாராயணன், “கண்டா வரச் சொல்லுங்க பாடலுக்கு உங்களது ஆதரவையும் அன்மையும் அளித்த அத்தனைப் பேருக்கும் நான் தலை வணங்குகிறேன். கொண்டாடப்பட வேண்டிய பல கிராமியக் கலைஞர்களுக்கு இது மிகப் பெரிய வெற்றி. அனைவருக்கும் நன்றி. மாரி செல்வராஜ் உடன் கண்டா வரச் சொல்லுங்க பாடலுக்கு நான் நடத்திய கலந்துரையாடல் புகைப்படம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சந்தோஷின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் தனுஷ், “இன்னும் நிறைய வரக் காத்திருக்கிறது. நம் மண்ணின், நம் ஆன்மாவின் தகுந்த திறமைகளைக் கண்டறிந்து உலகுக்கு காட்டியதற்கு நன்றி” என சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version