சினிமா செய்திகள்
எனது அடுத்த பட இயக்குனர் இவர்தான்: தனுஷ் டுவிட்!
நடிகர் தனுஷ் சமீபத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட்ட நிலையில் இன்று அடுத்த படத்தின் இயக்குனரை அவர் அறிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் ஏற்கனவே ’திருச்சிற்றம்பலம்’, ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் அது மட்டுமின்றி தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’நானே வருவேன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமீபத்தில் அவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் ’வாத்தி’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’வாத்தி’ படத்தை அடுத்து தான் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேற்று வெளியான ’ராக்கி’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ’சாணிக்காகிதம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்த படத்தில் தான் நடிக்க உள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த படத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து தனுஷ் வட்டாரத்தில் விசாரித்தபோது இது ஒரு கேங்க்ஸ்டர் படம் என்றும் 50 களில் நடந்த இரண்டு கேங்க்ஸ்டர்களுக்கு இடையே நடந்த போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் தனுஷ் ஒரு கேங்ஸ்டர் தலைவராகவும் இன்னொரு பிரபலம் இன்னொருவர் கேங்ஸ்டர் தலைவராகவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.