சினிமா செய்திகள்

ஓடிடியா? திரையரங்குகளா? குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ‘மாறன்’ படக்குழு!

Published

on

தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் ஓடிடியில் தான் ரிலீஸாகும் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரு சிலர் திரையரங்குகளில் தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறிவந்த நிலையில் படக்குழு தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷூக்கு அதிருப்தி இருந்ததாகவும் எனவே இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என தனுஷ் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியதாகவும் வதந்தி கசிந்தது. மேலும் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாவது உறுதி என்றும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்து ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் ‘மாறன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மாறன்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் ‘மாறன்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த அன்பறிவு திரைப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தான் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version