சினிமா செய்திகள்

தனுஷூக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் மதுரை தம்பதிகள்: பின்னணியில் ரஜினியா?

Published

on

தனுஷை தங்கள் மகன் என்று மதுரையைச் சேர்ந்த தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையைச் சேர்ந்த தம்பதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் தங்கள் மகன் என்றும் கஸ்தூரிராஜாவின் மகன் கிடையாது என்றும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது

இந்த நிலையில் இந்த வழக்கின் பின்னணியில் மதுரை ரஜினி ரசிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தனுசுக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கக்கூடாது என முன்னணி இயக்குனர்களுக்கு ரஜினி தரப்பிலிருந்து வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரஜினி ரசிகர்கள் மீண்டும் இந்த வழக்கை தோண்டி எடுக்க உதவி செய்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆனால் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் இதுகுறித்து கூறிய போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததற்கும் தங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்றும் இது குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறியுள்ளனர்

 

seithichurul

Trending

Exit mobile version