தமிழ்நாடு

திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்திக்கும் டிஜிபி மற்றும் ஐஏஎஸ் உயரதிகாரிகள்!

Published

on

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி மட்டும் தனித்து 124 தொகுதிகளிலும் கூட்டணியுடன் 157 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வராக பதவி ஏற்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது காவல்துறை மற்றும் அதிகாரிகள் அவரை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழக காவல்துறையின் டிஜிபி அவர்கள் சற்று முன்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரகளை சந்தித்தார். அவரை அடுத்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்டம் ஒழுங்கு குறித்து அவர் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுவதால் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அவரை சந்தித்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version