தமிழ்நாடு

துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெடை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்

* நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* வேளாண்மைத் துறைக்கு 1,738 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 1,580 கோடி ரூபாயில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* தீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.5,000 கோடி ஒதுக்கீடு!

* 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம்!

* கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு

* வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை

மேலும் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும்,
தமிழ்நாட்டை நாட்டிலேயே தலை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் வேதாநிலையம் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மேலும் நல் ஆளுமை குறியீட்டில் தமிழகம் முதலிடம் என்றும், கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது என்றும், கொரோனா தாக்கம் வரவு, செலவு திட்டத்தில் எதிரொலித்துள்ளது என்றும் ஓபிஎஸ் கூறினார்.

இந்த நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் தெரிவித்துள்ளன.

Trending

Exit mobile version