தமிழ்நாடு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த மண்டலமாக மாற உள்ள நிலையில் இது கரையை கடப்பது எப்போது என்பது குறித்த தகவலை சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்ககடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் காரைக்காலுக்கும் இடையே கடலூரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு நாளை காலை தமிழக கடலோர பகுதியை நெருங்கும் என்றும் அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை இரவு கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது.